அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.09.23
கவி இலக்கம் 285
விந்தை

மெல்ல மெல்லப் புள்ளி
இட்ட மேனி சிவந்த
வானத்தில் முகில்
வரைந்த கோலங்கள்

மழைத்துளி பட்டது போல்
கரைந்து காணாமல்
போகிறதே

அண்ணாந்து பார்க்க
அளக்கவே முடியாத
வானத்தில் பயமின்றி
விமானம் பறக்கிறதே

கடல் எவ்வளவு
கொந்தளிப்பாயினும்
பயணிகள் சுமந்து
கப்பல் கரை சேர்கிறதே

மலை உயரமாயினும்
உச்சி ஏறிச் சாதனை
படைக்கும் மனிதன்

விந்தையிலும் விந்தை
முயற்சியே மூலதனம்
முழுமூச்சே சுவாசம்
ஆகிறது .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading