26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
மனோகரி ஜெகதீசன்
குழலோசை
மூச்சுக் காற்றை வாங்கி தடவும் விரலைத் தாங்கி புல்லாங்குழல் தள்ளும் ஓசை
புரிந்திடச் சொன்னேன்
அதுவே குழலோசை
கேட்பீரோ எந்தன் குரலோசை
கேட்டீரோ கண்ணன் குழலோசை
மொட்டு மனமும் சிரிக்கும்
கட்டு விட்டு
பட்ட மனமும் துளிர்க்கும்
கொட்டும் குழலோசை மெட்டால்
நாடி நரம்புகள் சிலிர்க்கும்
நாளையென்ற நினைவும் மறக்கும்
மெத்தையென உடலும் மிதக்கும்
மோக முள்ளும் நழுவும்
மோகனம் வந்து தழுவும்
நத்தையென உணர்வும் ஊரும்
நிம்மதியே நிகழ்வெனக் கூறும்
நிகழ்த்தியவர் யாரென்றும் அறியும்
தன்வினை கழன்று ஓடும்
ஆனந்த சுகமே சூழும்
பரமானந்தப் பயில்வே நிகழும்
மேயும் பசுக்களும் நாமே
மேய்ச்சல் மறந்து
சாயும் செவியால் சுரத்தை ரசிப்பவரும் நாமே
ராதை கோபியராயே ஆவோம்
கண்ணன் குழலோசைக்கே சாய்வோம்
அவனருளையே எங்கும் பாயச்செய்வோம்
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-06-2025
வண்ணப் பெண்ணவளாய்
வாஞ்சையோடு உலாவருவாள்
குடும்பமென அர்ப்பணித்து
குலவிளக்காய் சுடர்விட்டாள்
வாழ்நாள் முழுதும் உழைத்து
வானம்...