கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

குழலோசை

மூச்சுக் காற்றை வாங்கி தடவும் விரலைத் தாங்கி புல்லாங்குழல் தள்ளும் ஓசை
புரிந்திடச் சொன்னேன்
அதுவே குழலோசை

கேட்பீரோ எந்தன் குரலோசை
கேட்டீரோ கண்ணன் குழலோசை

மொட்டு மனமும் சிரிக்கும்
கட்டு விட்டு
பட்ட மனமும் துளிர்க்கும்
கொட்டும் குழலோசை மெட்டால்

நாடி நரம்புகள் சிலிர்க்கும்
நாளையென்ற நினைவும் மறக்கும்

மெத்தையென உடலும் மிதக்கும்
மோக முள்ளும் நழுவும்
மோகனம் வந்து தழுவும்
நத்தையென உணர்வும் ஊரும்
நிம்மதியே நிகழ்வெனக் கூறும்
நிகழ்த்தியவர் யாரென்றும் அறியும்

தன்வினை கழன்று ஓடும்
ஆனந்த சுகமே சூழும்
பரமானந்தப் பயில்வே நிகழும்

மேயும் பசுக்களும் நாமே
மேய்ச்சல் மறந்து
சாயும் செவியால் சுரத்தை ரசிப்பவரும் நாமே

ராதை கோபியராயே ஆவோம்
கண்ணன் குழலோசைக்கே சாய்வோம்
அவனருளையே எங்கும் பாயச்செய்வோம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading