இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஒளவை

வழிகாட்டு இறைவா…..
======================
ஆதி முதல்வனே
அண்டம் ஆள்பவனே
சோதி வடிவனே
சொர்க்கம் உன்பதமே
நீதி வழுவுதே
நித்தமும் பூமியில்
சேதிகள் மூலம்
சொல்வது என்னவோ

வாதிட ஏதுளது
வந்தபயன் கொண்டோமே
தீதினில் உழல்கின்றோம்
திண்டாடி மாழ்கின்றோம்
நாதியற்ற உயிர்களோ
நானிலத்தில் பலகோடி
பாதிப்பைக் குறைக்கும்
பரிகாரம் காட்டிவிடு

கங்கையைத் தாங்கிக்
கனத்தினைக் குறைத்தாய்
திங்களைக் காத்து
சடையிலே வைத்தாய்
மங்கிடும் பூமியின்
மானத்தைக் காக்கத்
தங்கிடு இங்கே
தாங்கவில்லைத் துன்பம்

பொங்கிடும் தீமையின்
போக்குகள் நீளுதே
எங்கிலும் உந்தன்
எண்ணமும் மறையுதே
பங்கங்கள் சூழ்ந்து
பாரெங்கும் துன்பமே
எங்களை மீட்க
ஏதொரு வழிகாட்டு.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading