இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஒளவை

அலையோசை
———————
அழகிய அலைகள்
…..அருகில் செல்கையில்
பழகிய நட்பாய்ப்
…..பாசமுடன் அணைக்குமே
இளகிய மனதில்
…..இன்பத்தைக் கூட்டியே
களவாடிச் சென்றிடக்
…..கண்களும் துடிக்குமே

ஆழிப் பேரலைகள்
…..அசுரனாய் வருகையில்
ஊழிக் காலமாய்
…..உலகம் அழியுமே
வாழ்ந்திடும் வேளையில்
…..வளமாய் இருந்தே
பாழ்நிலை மறந்தால்
…..பாரெல்லாம் இன்பமே

உள்ளத்தில் உந்தன்
…..உருவத்தின் ஓசையோ
வெள்ளத்தை நினைத்து
…..வேதனைக் கோலமாய்
கள்ளத்தனம் வேண்டாம்
…..கனிவு காட்டியே
கொள்ளை கொள்ளாமல்
…..கடமை செய்திடு

கடந்த காலங்கள்
…..கண்முன் வருகையில்
நடந்த சோகங்கள்
…..நரக வேதனையே
தொடரும் நாட்களில்
…..தொல்லை வேண்டாம்
அடங்கியே செல்வாய்
…..அலையே நீயும்.

ஔவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading