ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மீண்டெழு!
வாழ்க்கை என்பது வரையாத புதிராய்
தாழ்விலிம் உயர்விலும் தந்திடும் பாடத்தை!
ஆழக் கடலிடை ஆயிரம் முத்துண்டு
ஆக்கிடும் முயற்சியே ஆரமென் றாக்கிடும்!

வலியெனக் கிடந்திட்டால் வழியது முடங்கும்
வனப்பினைப் பறித்து வாட்டியே வதைக்கும்!
உளிபடும் கல்லே உலகினில் சிலையென
உறுதியாய் நின்றிட உயர்வுகள் வசப்படும்!

நிரந்தரம் என்பது நிசத்தினில் இல்லை
நிமிர்வுடன் தொடர்ந்திட அகன்றிடும் தொல்லை!
வரமுடை பிறப்பிது வருந்தலை விட்டிடு
வரலாறை நிறுத்திட வாகையாய் மீண்டெழு!

கீத்தா பரமானந்தன்16-10-23

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading