இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 239
24/10/2023 செவ்வாய்
ஆறு மனமே!
காலை மாலை யென்று
கடிதாய் வேலை செய்து
நாலு இரண்டு சேர்க்கும்
நாளும் வரும்-ஆறு மனமே!

வேலை யென்று சொல்லி
வெளி நாட்டிற் கனுப்பி
காலை வாரும் கயவர்
கருகுவர்-ஆறு மனமே!

பித்தம் வாதம் போன்ற
பீடை பிணிகள் நீங்கி
சித்தம் இனிக்க வாழும்
சிறப்பு வரும்-ஆறு மனமே!

குழந்தை குட்டி குஞ்சை
குண் டெறிந்து சிதைக்கும்
பாழும் கொடிய யுத்தம்
படியும்-ஆறு மனமே!

கூறு போட்டு உலகை
குட்டிச் சுவர் ஆக்கும்
நாறும் எந்த அரசும்
நலியும்- ஆறு மனமே!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading