இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித் தலைப்பு
ஆறு மனமே ஆறு
*********************
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: ஏழு மாச்சீர்கள்
_____________
சேறு சகதி சேர்ந்த வாழ்வு
செத்து மடியும் வரையில்
நீறு பூத்த நெருப்பில் வெந்து
நித்தம் கலங்க வேண்டாம்
கூறும் அடியார் குறைகள் தீர்க்கும்
குமரன் துணையைக் கொண்டு
நாறு கின்ற நந்த வனம்போல்
நல்ல வாழ்வை அமைப்பாய்!
சீலம் பெரிது சிந்தை இருத்து
சிக்கல் தீர்க்கப் பார்ப்பாய்
ஓலம் வேண்டாம் ஓட்டு வாழ்வை
ஒடிந்து போதல் தகுமோ
பாலம் அமைத்துப் பதியை நாடு
பார்ப்பாய் ஒருநாள் விடிவு
காலம் ஒருநாள் கனிந்து வருமே
கவலை வேண்டாம் உனக்கு!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading