Selvi Nithianandan

மாவீரரே
கார்த்திகை வந்தாலே
கண்ணீராய் நனைந்திடும்
கல்லறைகள் எல்லாம்
ஒளியாய் காட்சிதரும்

காரிருள் சூழ்ந்திடும் வீரருக்காய்
காசினி பொழிந்திடும்
தூறலாய்
காந்தள் மலருமே
தூய்மைக்காய்
காரணன் சொல்லிட்ட
வாய்மைக்காய்

காலங்கள் ஓடித்தானும்
செல்லுதே
காரிகை அகமும்
துடிக்குமே
ஞாலத்தில் காவியமாய்
நிலைபெறவே
கனவுகள் நிலைத்திட
பாலமாய் நாமும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading