சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 125

“தீப ஒளியே”

தீப திருநாள்
ஞானத்தின் பெருநாள்
ஊர் கூடி
உறவு கூடி
உன்னதமாய் கொண்டாடிய பொன்னாள்
நன்னாள்!

தீபாவளி அன்று புத்தாடை அணிந்து
பூத்திருப்போம் புது பூலிவுடன் காத்திருப்போம்!

ஆட்டு இறச்சி
பனை ஓலையில் சுத்தி
ஒரு பங்கு
வீடு தேடி ஒடி வரும்!

அம்மா காரசாரமாய்
சுவையாய் சமைத்திடுவா மூக்கு ஒழுக துடைத்து துடைத்து
உண்டு மகிழ்ந்த காலம் அது ஒரு காலம்!

இன்னும் நினைக்க நினைக்க இனிக்கிது
மாலையில் எள்ளு மோதகம் சுவைத்து உண்டு!

உடன் பிறப்புக்கள்
நண்பிகளுடன் மாலை முழுதும் விளையாட்டு
மகிழ்ந்து இருந்த காலம் அது ஒரு ஞாலம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading