இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நகுலா சிவநாதன்

தண்ணீர்

பள்ளம் மேடு பாய்ந்து நீயும்
பாதை அமைத்து பாய்கின்றாய்
கள்ள மில்லா ஓட்டம் கண்டு
கதைகள் பேசி மகிழ்கின்றோம்
உள்ளம் எங்கு பசுமை தீட்டி
உலகம் போற்றும் வரவானாய்
வெள்ள மாகப் பாய்ந்து விட்டால்
வேரை நீயும் அழித்திடுவாய்

நாட்டின் வளத்தை நன்றாய்க் கூட்டி
நாளும் வளர்ச்சி காண்கின்றாய்
மேட்டு வயலின் செழிப்பு காண
மேன்மை நிறைத்து மேவுகின்றாய்
கூட்டும் விளைச்சல் காண மக்கள்
கூடி தண்ணீர் பாச்சுகின்றார்
நீட்டி வளரும் நெல்லும் இன்று
நீண்டு வளருது பாரீர்!

நகுலா சிவநாதன் 1739

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading