முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1901❤️

காலத்தின் மடியில்…!

காலத்தின் மடியில்
வெற்றுக் காகிதங்கள் அல்ல
கவிதைகள் ஆகின்றோம்
கோலத்தின் எழிலில்
முதுமையாய் அல்ல
முயற்சியால் உயருகின்றோம்!

வான்மேக அழுகையின்
வார்ப்புகளால் நனைவோம்
வணங்காது துதி பாடாது
நியாயங்களாய் நிமிர்வோம்
அ நீதிகளின் அகத்தினில்
ஆட்படாது நியாயமாவோம்…!

கண்களைத் திறந்தே காணும்
கனவுகள் அல்ல இவை
இலக்கு ஒன்றின் தொடுகை
கலக்கம் தவிர்த்துக்
காவியங்களாவோம் நாம்…!
சிவதர்சனி இராகவன்
16/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading