20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
சந்தம் சிந்தும் சந்திப்பு
பிறந்தமனை
பிறந்தமனை நினைப்பு பகலிரவு உளத்தில்
இறப்புவரை என்றும் இதயத்தில் இருந்திடும்
பிள்ளைப் பருவமாய் பள்ளி சென்றது
துள்ளி விளையாடி சுறுசுறுப்புக் கண்டது
தினம்தினம் கனவில் தித்திப்பாய் வந்துவிடும்
மனமென்றும் தேடும் மனையின் வாசனை
இனந்தெரியாக் கலக்கம் இதயத்தில் உதிக்க
சினங்கொண்டே வாழ்வைச் சோம்பலுடன் நகர்த்தி
கட்டுக் கடங்கா கற்பனைக் கோட்டை
முட்டி மோதிட மூச்சு பிறந்தமனையில்…
கோசலா ஞானம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.