சர்வி

கலவரம்..

தேவையற்ற பேதங்கள்…
கண்ணை மறைக்கும் மாயங்கள்…தடையற்ற கொடூர ஆசை….வரைப்படுத்தா அபிலாஷை….
முட்டிமோதும் விசனங்கள்….
கலவரமே நிலைவரம்…

உளநல ஊறு உதவாத கொள்கை….
மதியாத மாண்பு புரியாத கொள்கை….
தெரியாத பாதை திணறும் நேயம்…
அவலத்தின் ஓலம் அடாவடி திமிர்…
பேச்சும் மூச்சும் மௌனிக்க வெச்சது சுழட்டல்….
காத்தது அணைக்க கரம் கோர்க்க எவர்வருவாரோ….கோடிகோடி புண்ணியம் சேர்ந்தே தந்திடலாம் …நாட்டுங்கள் சமாதானம்…
கலவரம் பொசுங்கட்டும்…மனித குலம் தழைக்கட்டும்…

நன்றி..

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading