அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 214
மனிதத்தின் நேயமே
பாலைவனத்தில் நீரை தேடுவது
போல இன்றைய மனிதநேயம்
வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கொண்டிருக்கும் மனிதநேயம்

அவரவர் சுயநலத்தால்
மனிதநேயத்தை தேடும் நிலை
இருந்தாலும் அங்கொன்று
இங்கொன்று என காண்பது மகிழ்வு

அன்பென்னும் நீர்விட்டு
பரிவுவென்னும் பசளையிட்டு
பாசமென்னும் மண்ணில்
விதையிட்டு நடு நாளை
மனிதநேயம் மரமாகும் உலகில்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan