பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.12.23
கவி இலக்கம் -296
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
தொடர்ந்து தந்த அன்பில்
படர்ந்த சொந்தமின்றிய
பந்தம் தந்த பிணைப்பு

பெற்றெடுத்த பிள்ளையாய்
ஊற்றெடுத்த அகதி மண்ணில்
எமை உப்பு மூடை சுமந்த
ஜேர்மன் பெற்றோர் பூரிப்பு

செய்த உதவியோ உச்சம்
எழுதவே முடியாத மிச்சம்
முழுதாகத் தாயகப் பிரிவு
மறக்க உபசரித்த உள்ளம்

இரண்டும் இவ் உலகை
விட்டுப் பிரிந்ததே எமை
வாட்டி வதைக்கும் மறக்க
முடியாத தாங்கொணாத்
துயரமே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading