பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

காரோடத் தானோடி வந்தாள் வசந்தம்
பாரோடு கலந்தாடிப்
பூட்டினாள் பசுமை
சீரோடு சிறப்பெய்தச்
சிந்தினாள் நிகழ்வை
வேரோடே சரிந்திடவே
விழ்த்தவே தீதை

வசந்தத்தில் ஓர்நாள்
வண்ணம் காட்ட
வரைவிட்டேன் பாவை

துளிர்த்தன மரங்கள்
தளிர்களைத் தாங்கி
நிறைந்தன அவையும்
குடைகளை யாக்கி
சிரித்தன பூக்கள்
கிளைகளில் குந்தி
சிதறிய பின்னும்
திட்டின கோலம்
களித்தன வண்டுகள்
தேனதனை யுண்டு
காவினபின் மணிகளை
கருவினை யாக்க

அடுத்தடுத்துக்
கூவின குயில்கள்
குரலெடுத்து
விடுப்பெடுத்துக்
குழந்தையும்
குரல்கொடுத்தது
தனைமறந்து

தென்றலும் தீண்டித் துடைத்தது வெம்மை

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading