ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-19

11-01-2024

உலகின் நிலை மாற என்னென்ன கொண்டு வருகிறாய்…

புதிதாய்ப் பிறந்தவளே புத்தாண்டே
புலம்பி நானும் தள்ளுகின்றேன்
நினைவினில் போட்டு விடு -நீ
நிம்மதியைக் கொடுத்து விடு!

விலைவாசியைக் குறைத்து நீ தொலைபேசியை கொஞ்சம் முடக்கி
நிலையான தொழிலைக் கொடுத்து
உலை வைக்க அருள் புரிவாய்!

இயற்கை அழிவை அகற்றி
செயற்கை ஒக்சிஜனை சுவாசித்து
தற்கொலை தகர்த்து, தன்மானம் காத்து
மனிதாபிமானம் கொண்டு

நோயற்ற வாழ்வு பெற்று
பல்லாண்டு, பல்லாண்டு என்று
உறவுகள், குடும்பமென குதுகலமாக வர
உன்வரவும் உத்தரவும் தருவாய்!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading