நகுலா சிவநாதன்

மலர்ந்துவா! தைமகளே!

புலர்கின்ற புத்தொளியே புனிதம் காக்க
மலர்கின்ற புத்தாண்டே மகிழ்வைத் தருக!
பிறக்கின்ற தைமகளும் புதுமை தரவே
நிறைக்கின்ற நல்மாதம் நித்திலத்தில் பொலிக!

தைமகளே வருக! வருக!
தரணியெங்கும் தமிழ் மணக்க வருக!
தாய்மண் பெருமை நிறைத்து வருக!
தண்மதியாய் ஒளிபரப்பி நிறைக!

மண்மலரே மணந்து வருக! வருக!
மாண்புகளை அள்ளி தருக! தருக!
கண்மலர்ந்து கனிகொடுக்கும் மரங்கள் நிறைக!
காசினியில் அன்பு மலர்க! ஆசை குறைக!
இன்பம் பெருக! இல்லம் செழிக்க!
மலர்ந்து வா தைமகளே!
புலர்ந்து பொலிக! பூமகளே!

நகுலா சிவநாதன் 1744

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading