புரிய முயலாதே 2
-
By
- 0 comments
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
ஜெயம் தங்கராஜா
சசிச
பொங்கலோ பொங்கல்
வியர்வையாளரின் உயர்வைச்சொல்ல வந்தது ஒருவிழா
வயற்காட்டு மன்னவரை பெருமைப்படுத்தும் பெருவிழா
புதியபானை மட்டுமா பொங்கியே வழிவது
துதித்துக்கொண்டே ஆதவனை நன்றிதனை மொழிவது
அறுவடையின் ஆனந்தம் உருவங்களில் தெரியும்
புதுவுடுப்பு கோலந்தாங்க அழகு நடைபுரியும்
சிந்தைக்குள்ளே பொங்கலதும் விந்தையதை நிகழ்த்தும்
வந்துகொண்ட தைமகளால் தலைமுறையும் மகிழும்
சேற்றில் உழவர் கால் வைத்தார்
சோற்றில் அவரால் கை வைத்தோம்
இருள் போக்கும் ஆதவனாம் இத்தை
அருள் தந்தே காத்துவிடும் இனத்தை
நன்றி பாராட்டும் அழகான தருணமன்றோ
விண்ணையும் மண்ணையும் போற்றுவதெம் கடமையன்றோ
பொங்கலின் சுவையாக காலமினி அமைந்துவிடும்
மங்காத சூரியனாய் வாழ்தேசம் வலம்வரும்
மங்கல தினமிது இன்பங்களாய் தந்திடும்
திங்களின் முழுவுருவாய் வெளிச்சத்தினை சிந்திடும்
வையகத்தில் பெருநலன்கள் பெருவாரியாய் சேர்ந்திடும்
மெய்வருந்தும் நிலைமாறி ஆரோக்கியம் பூத்திடும்
ஜெயம்
16-01-2024
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments