கீத்தா பரமானந்தன்

பொங்கட்டும் பொங்கல்!

மங்கலம் பொங்க
மனங்கள் சிரிக்க
எங்கணும் செழுமை
எழிலுடன் தங்க
பங்கயம் என்றே
பாரதும் மிளிரப்
பரவசம் நிறத்தே
பொங்கட்டும் பொங்கல்!

கங்குலும் விலகக்
கதிரதன் அணைப்பில்
தங்கியே விழைச்சல்
தரணியை நிறைக்க
கண்மாய் குளங்கள்
கரையின்றிப் பாய
இல்லத்தில் உள்ளத்தில்
இனிமையைப் பொங்கட்டும்!

அன்பினிற் பிணைந்து
அகிலமும் ஒன்றாய்
சிந்தனை விரித்துச்
சிகரங்கள் தொட்டிட
வெற்றிக் களிப்புடன்
வேட்டுகள் முழங்க
எங்கணும் பொங்கட்டும்
பொங்கலோ பொங்கல்!

கீத்தா பரமானந்தன்15-01-24

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading