சிவதர்சனி இரா

கைக்குள் கையாய்க் கைத்தொலைபேசி…!

கைக்குள் கையாய்
மெய்க்குள் மெய்யாய்
ஐயம் தெளிவுற மெல்ல
அகப்பட்டது இக்கருவி..
குருவி போல் அளவாய்
குவலயத்தின் பயனாய்
நிறைந்தது வாழ்வில்
இதுவன்றி இல்லை வாழ்வு..
பிரிவென்பது இல்லை
விரிகின்றது இதன் பயன்
முடிவிலி அற்ற போக்கு
முயன்றாலும் பிரியாத நோக்கு..
குழந்தைகள் முதல் மூத்தோர்
கைக்குள் கையாய் இதுவாம்
ஐயம் இங்கில்லை
ஐக்கியப் பட்ட போக்காம்..
விஞ்ஞானத்தின் கொடையாய்
விரிகிறது இதன் பயன்
தவறெனக்கண்டோரும் இங்கே
தவறாது இதைத் தொட்டார்…
முதலையின் வாலைத் தான்
பிடித்தது போலும்
மூச்சு நிற்கும் வரை இதை
விடுவாரும் இங்கில்லை..
சிவதர்சனி இராகவன்
1/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading