ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.2024
கவி இலக்கம் -301
கைக்குள் கையாய்

மெய்க்குள் தோய்ந்த பொய்
உணர்வுகள் ஊடுருவி ஒரு
கைக்குள் கையாய் பையில்
அடங்கா கைத் தொலைபேசி

முடங்கும் நேரந் தெரியாது
தொடங்கும் பொய்கள்
தொய்வின்றி அல்லும் பகலும்
உரையாடும் தொல்லைபேசி

யார் யாரோ முகந்தெரியா
உறவுகள் போர்வையாக்கி
உரையாடல் ஊடலாகிப்
பெரும் பாடாய்ப் போர்
தொடுத்தது

முக்கிய தேவை மறந்து
மூக்கை நுழைத்த பதிவு
கோர்வையாக்கிப் பாதை
தெரியாது போகுமிடம் புரியா
தேவையற்றவை இழுத்துத்
தலையிடி ஆனது .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading