ரஜனி அன்ரன்

“ கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.02.2024

இரண்டாயிரத்தி இருபத்தி நான்கு
தேர்தல் ஆண்டாக மிரள வைக்குது உலகை
உலகில் எழுபத்தியாறு நாடுகள்
தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பு
ஜனநாயகம் தான் ஜெயிக்குமா?
மக்களாட்சி தான் மலருமா ?
பொறுத்திருந்து தான் பார்ப்போம் நாமும் !

ஒட்டுமொத்த உலகும் எதிர்பார்த்திருக்க
சர்வதேச ரீதியில் பொருளாதார நோக்கில்
அரசியல் வணிகம் சார்பில்
தேர்தல் திருவிழா களைகட்டப் போகுதா?
போர்த்தாக்கம் பணவீக்கம்
கடன் பிரச்சினைகள் தான் ஒழியுமா?
கனவோடு காத்திருப்போம் நாமும் !

ஒருநாள் மகுடம் சூட
ஒற்றை விரலுக்கு மைபூசி
கற்றையாகப் பணத்தினை வாரியிறைத்து
தேர்தலில் வெற்றி பெறும்வரை
வாக்குறுதிகளை அள்ளிவீசி
வாக்குகளைப் பெற்றுவிட்டு
வாக்குப் போட்ட மக்களுக்கு
வேட்டும் வைப்பார்களே !

எத்தனை தேர்தல் வந்தாலும்
எத்தனை ஆட்சி மலர்ந்தாலும்
தேர்தல் திருவிழா தான் களை கட்டினாலும்
ஏழைகளின் வாழ்வு என்றும் கண்ணீரிலே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading