தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பிள்ளைக்கனியமுதே

உன் மழலை மொழியில் கரைந்தேனே
உன் புன்னகையால் உவகை அடைந்தேனே
அழகான பாசையை விழிகளும் பேசுமே
குழந்தையின் அருகில் குடியேறும் சந்தோசமே

சின்ன நிலவு சிந்தையைக் கவர்ந்ததென்ன
வண்ண மலரும் மயக்கம் தருவதென்ன
பூவொன்று கால்முளைத்து அசைவதென்ன எழிலாக
பாவொன்றை பாடி கவிஞனானேன் ஒருவழியாக

அப்பாவெனும் அந்தஸ்த்தை அளித்த செல்லமே
இப்போழுதும் எப்பொழுதும் நீதானென் செல்வமே
உணர்வுக்குள் இன்பத்தை செருகிய சுட்டிப்பெண்ணே
கனவையும் நிறைத்தாயடி கண்ணான கண்ணே

ஈரைந்து மாதமாய் சுமந்தவள் அன்னை
தரையதை அடையநீ உடைத்தாளே தன்னை
பொன்போன்ற முகங்காண சோகங்கள் தீர்ந்ததடி
எண்ணிலா பேரின்பம் எண்ணங்களைச் சேர்ந்ததடி

ஜெயம்
12-02-2024

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading