ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.02.24
கவி இலக்கம் -303
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

வேற்று நாட்டில் மற்றவர்
துணையின்றி வாழ்பவர்
அவர்கட்கு ஒரு ஆறுதல்

வாடிய நோயால் வீட்டில்
முடைந்தவர்க்கு மிகவும்
நல்ல உற்றார் போல்
உரையாடல்

திகதி பார்த்துத் தீரா
வலியில் வாடுபவர்க்கு
உற்றுக் கேட்க இனிமை
ஆக்கம் நண்பன் போல்

அகதியாக தஞ்சம் புகுந்து
ஆதரவற்றோர்க்கு அருகில்
அமர்ந்து அரவணைக்கும்
உறவுகள் நண்பி போல

இரவு பகல் புரியாது ,நேரம்
போவது தெரியாது கற்கும்
இனிமை நிகழ்வு காற்றின்
வழி மொழியாகி வாழ்வு
தந்தாய் வறண்டு போன
இதயங்களிற்கு .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading