பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ காற்றின்வழி மொழியாகி வாழ்வு தந்தாய் “…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 15.02.2024

ஒற்றை மனிதனின் உருவாக்கம்
மாற்றான் தேசமதில்
காற்றலையாகி காற்றின் வழி மொழியாகி
தேம்ஸ்நதிக் காற்றோடு கலந்து
தேசமெல்லாம் தமிழ்மணம் பரப்புதே !

காற்றின் மொழியாகி காதோரம் வந்து
ஊற்றாகி உறவாகி உறுதுணையுமாகி
விழியாகி ஒளியாகி விடியல் தந்தாய்
உள்ளம் கவர்ந்தாய் இல்லம் தேடி வந்தாய்
வளம் தந்தாய் மொழியாகி வாழ்வும் தந்தாய்
கவிக்களமும் தந்தாய் கவி படைக்க !

வானொலி தேன் ஒலியாகி
தேசமெல்லாம் ஒலிக்குது
தேடலுக்கு வலுச்சேர்த்து
பெருக்கியது ஆற்றலை – உன்
படைப்புக்களும் தொகுப்புக்களும் ஏராளம்
பயன் பெற்றவரும் தாராளம்
தொழில் நுட்பத்திலும் அதிவேகம்
தொட்டு விட்டாய் இலக்கின் உச்சம் !

மார்க்கோனியின் மகத்தான கண்டுபிடிப்பு
ஹார்மோன்களுக்கு எல்லாம் மருந்தாச்சு
தனிமையைப் போக்கி தைரியத்தைத் தந்த
காற்றின் மொழியே காதலின் சுகமே – நீ
ஆற்றும் சேவையோ அளப்பெரிது
உனை வாழ்த்திட வார்த்தைகள் இல்லை
என்றும் வாழ்க பல்லாண்டு வளமோடு நீ !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading