கெங்கா ஸ்ரான்லி

தமிழால் எழுவோம்
————-
தரணியெங்கும் தமிழே பேச்சு
தலையெடுக்க வழியுமாச்சு
தமிழர்களின் வாழ்வில்
முக்கியம் ஆச்சு
உலகத் தமிழர் உன்னதம்
காணுமே செம்மொழியாம் தமிழ்மொழியை
உலகெலாம் உலாவரும்
தேன்தமிழ் செந்தமிழ்
அடுத்த தலைமுறை ஆவலுடன்
அவனியில் கற்கும் தமிழ்
அடுத்தவரும் அதன்பண்பை
மதிக்கும் தமிழ்
எழில்மிகு சுவைத்தும்ப
எல்லோரும் போற்றும் தமிழ்
எங்களுக்கு பெருமைகள்
பல தந்த தமிழ்
கற்றவர் நடுவே காவியத் தமிழ்
கனிந்துவரும் சொற்றமிழ்
பெற்றவர் அதன் பேறை ப் பேணிக்காக்கும் பெருமைத்தமிழ்
உற்றவர் உறவினர்
உரையாட ஓங்குதமிழ்
நற்றவர் நானிலத்தில்
நடைபயிலும் அன்னைத் தமிழ்
இத்தனை பெருமை கொண்ட
இன்பத் தமிழால் எழுவோம்!

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading