சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1937

தாய்மொழி மறக்குமோ..

முகவரியாகி முடிவிலியாகி
முப்பொழுதும் தொடரும்
அகமதில் வரித்தால்
அழகெனச் சுழித்தால்
இகமெங்கும் சுகந்தரும்
இவ்வுலகில் அவதரித்ததாகும்…

மொழியிழந்த சமூகம்
தனையே தொலைக்கும்
விழி இருந்தும் பார்வைப்
புலனற்றே தவிக்கும்
மாசி இருபத்தொடு ஒன்று
உலகத் தாய்மொழி நாள்
நிலவென ஒளிரும் தமிழுக்கும்
ஓர் நாள் பாமுக அரங்கிலே..
சிவதர்சனி இராகவன்
22/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading