இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

ணந்த்ஹன் சிந்தும் சந்திப்பு!
பகலவன்!
காலக் கணிப்பின்
கதிரொளி இவனாய்ப்
பாலம் போட்டே
ஞாலம் இயக்கும்
நல்லொளிச் சுடராம்!

ஆக்கலும் அழித்தலும்
அண்டத்தின் நகர்வும்
ஆக்கிடும் ஞானியாய்
அனைத்திலும் பகலவன்!

சுழல்கின்ற பாதையின்
சூத்திரம் கொண்டே
நிலவிடும் இருளும்
நீத்திய விடியலும்!

பசுமையையின் பரவசம்
பாலையின் கனலும்
தணலெரிக் குழம்பும்
தந்திடும் காரணி

தாரணி வாழ்வினைத்
தரமிட்டு நின்றிட
ஆராதனையும் அறிவியலிலும்
வேரான கோளெனக்
காலாதி காலமும்
காட்சியாய்ப் பகலவன்!

கீத்தா பரமானந்தன்
04-03-24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading