பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

ஈசன் தந்தான் சரிபாகம்

மண்ணும்குளிர விண்ணும்குளிர
மாதவம் செய்தாய் பெண்ணே நீயும்
கண்ணும்குளிரக் கருத்தும்குளிர
காரணமானவள் நீதானே

பொன்னும் குவியப் பொருளும் நிறைய
புதுமைகள் பொங்கிட நின்றாயே
பண்ணும்இசைத்துப் பாடல் பாடவும்
பாவையுந்தன் புகழ்தானே

வளைகரம் கொண்டாய் விளைநிலமானாய்
குடியிருந்த கோயிலென்பார் கும்பிட்டுன்னை வணங்கி நிற்பார்

பூமிமாதவென்றுண்ணைப் புகழ்விளங்கப் பாடிக்கொள்வார்
பாரதம் துலங்கடவே நாயகி நீயானாய்
கங்காதேவியென்று உன்னைக் கைகூப்பி தொழுதிடுவார்

பெண்ணவள் என்றும் பெருமை சேர்க்கும் பொக்கிசமே
எங்கும் எதிலுமே உனது இயக்கம் ஈசன் தந்தான் சரிபாகம்

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading