” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

வேலி அடைப்போம்

பனை ஓலை வெட்டி
மட்டையுடன் ஒரு பக்கம்
தென்னை ஓலை கிடுகு
மறு பக்கம் அழகாக்கும்

முட்கம்பி முள் கிலுவை
முதுகினை பதம் பார்க்கும்
முட்டுக்கட்டை பூவரசு மரமும்
முண்டி அடித்து வளர்வாகும்

அண்டை வீடு பார்க்காமல்
அணைத்து காத்த வேலியாகும்
ஆணித்தரமாய் எமது குளியலுக்கு
அடைத்து மறைத்த வேலியாகும்

நாலு பக்க வேலிகள்
நல் இனிய உறவாகும்
நன்மை தீமை வந்தாலே
நடுப் பொட்டு வழியாகும்

அக்கம் பக்கம் எல்லாம்
ஆணி அடித்த மதிலாகும்
அழகு கொண்ட வேலியும்
அரண்மனை சுவர்போல் உருவாம்
அடுத்த ஜென்மம் ஒன்றென்டா
அடைத்து பார்த்து காப்போமே

Nada Mohan
Author: Nada Mohan