அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

வலியதோ முதுமை

வலியதோ முதுமை

சிறுதுளி பெருவெள்ளம்
நிறைமதி நிலவும் காலம்

துறுவென வளரும் வாழ்வில்
ஆண்டொன்று சென்றுவிட்டால்
வயதொன்றும் போய்விடுமே
அனுபவத்தால் முதிரும் முதுமை

வெறுமையின்றியே வாழ்வையும் நகர்த்தியே நின்றது
சாதனைகள் எத்தனையோ சரித்திரம் கண்டதும்

போதனைகள் செய்யவும் வலிமைகளாகிவரும் முதுமையின் சிறப்பு

வாழும்போதினிலே தேசபக்தர்கள் எத்தனை
ஆன்றோர்களாக நின்ற ஆண்மீகவாதிகள் எத்தனை
சோதனைகள் கடந்து வெற்றிகண்ட மாமனிதர்கள் எத்தனை

விரும்பியோ விரும்பாமலோ வலியவே வருவதுதான் இளமையின் மாற்றம்

பருவத்தின் நிலையிலே பலவகையான கொள்கைகள் மாற்றம்

பூவாகிப் பிஞ்சாகி காயாகிப் பழமும் ஆவதுதானே

இயற்கையின் நியதியும் விதியின் பாதையிலே வருமே வலியதோ முதுமையும்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan