வலியதோ முதுமை

வலியதோ முதுமை

சிறுதுளி பெருவெள்ளம்
நிறைமதி நிலவும் காலம்

துறுவென வளரும் வாழ்வில்
ஆண்டொன்று சென்றுவிட்டால்
வயதொன்றும் போய்விடுமே
அனுபவத்தால் முதிரும் முதுமை

வெறுமையின்றியே வாழ்வையும் நகர்த்தியே நின்றது
சாதனைகள் எத்தனையோ சரித்திரம் கண்டதும்

போதனைகள் செய்யவும் வலிமைகளாகிவரும் முதுமையின் சிறப்பு

வாழும்போதினிலே தேசபக்தர்கள் எத்தனை
ஆன்றோர்களாக நின்ற ஆண்மீகவாதிகள் எத்தனை
சோதனைகள் கடந்து வெற்றிகண்ட மாமனிதர்கள் எத்தனை

விரும்பியோ விரும்பாமலோ வலியவே வருவதுதான் இளமையின் மாற்றம்

பருவத்தின் நிலையிலே பலவகையான கொள்கைகள் மாற்றம்

பூவாகிப் பிஞ்சாகி காயாகிப் பழமும் ஆவதுதானே

இயற்கையின் நியதியும் விதியின் பாதையிலே வருமே வலியதோ முதுமையும்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading