பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

ஊக்கம்

ஊக்கம் ஒவ்வொருவருக்கும் உயர்வைத் தரும்
ஆக்குகின்ற மனிதர் காலம் நன்மைபெறும்
தேக்கம் காணாத வாழ்க்கையே தரம்
பூக்கும் நாட்கள் எல்லாமே வரம்

வீழ்ச்சி அவ்வப்போது வந்துவந்தே போகும்
தாழ்வில் தளர்ந்துகொண்டே உள்ளமதும் நோகும்
பள்ளத்தை தாண்டியே வெள்ளம் ஓடுவதில்லையா
துள்ளியே வெளிவந்து பாதைதனை தேடுவதில்லையா

விழுவதும் எழுவதும் சொல்லப்போனால் இயற்கையே
அழுதுகொண்டு முயலாமல் முடங்குவது செயற்கையே
சோதனைகள் இன்று வெற்றி நாளையாகலாம்
வேதனைகள் எல்லைதாண்டி மகிழ்ச்சியின் வேளையாகலாம்

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
நிலமையில் வரவேண்டும் கட்டாயம் திருத்தம்
அச்சமில்லாதவனே இங்கு அம்பலம் ஏறுவான்
உச்சங்களின் அனுபவிப்பை உரக்கவே கூறுவான்

வெற்றியை நோக்கிய மானிட ஓட்டம்
சற்று தாமதித்தாலும் கொள்ளலாமோ வாட்டம்
விடாமுயற்சியதே தந்துவிடும் தளராத தன்னம்பிக்கை
தடைகளை உடைத்தெறிந்தே அடைந்துவிடு இலக்கை

ஜெயம்
01-04-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading