புன்னகைக்கு ஈடேது

வியாழன் கவி 1957..

புன்னகைக்கு ஈடேது..

பூக்களின் இதழ்விரிப்பாய்ப்
பூமியில் எத்தனையோ
இதயங்களின் புன்னகை
துயரத்தின் ஆழத்தில் வீழ்ந்து
தூண்டிற் புழுவாய்த் துவண்டு
ஆற்றுவார் தேற்றுவாரின்றித்
தவித்த உளங்களின்
உணர்வின் தெறிப்புகள்
அப்பப்போ மின்னல் போல்
மின்னி மறையும் அழகியல்
புன்னகைக் கோலமாய்
மனித மனங்களைப் புடமிட
எங்கும் எதுவும் அழகே
புன்னகை அதனிலும் எழிலே…
சிவதர்சனி இராகவன்
4/4/2024

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading