பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

பூக்களின் புது வசந்தம்

வியாழன் கவி 1960…!
பூக்களின் புது வசந்தம்

நான் பூமியில் நடக்கவில்லை
அப்படியே மிதக்கிறேன்
எங்கே பூக்கள் என் பாதம்
பட்டு மிதிபட்டுவிடுமே
என்றெண்ணி வரமொன்று
கேட்கிறேன் இறக்கை தா
எனக்கும் வேண்டும் இரு
இறக்கைகள் தருவாயா…
காணும் இடமெங்கும்
காட்சியாய் விரியும் பூக்களை
கட்டி அணைத்து முத்தம்
இட்டே மகிழ வேண்டும்
வருடிக் கொடுத்து தாயாய்
ஒட்டியே உறவாட வேண்டும்
பாக்கள் புனைய வேண்டும்
பாடிக் களிக்க வேண்டும்
பத்திரமாய்க் காக்க வேண்டும்
மழைத்துளிகள் அடித்துக்
கவர்ந்து போகாமல்
வெம்மை சுட்டெரித்து விடாமல்
வண்டினங்கள் மெல்லுடல்
துழைத்து வலி கொடுக்காமல்
ஆம் என் விழிவலைக்குள்
விழுங்கிக் கொள்ளவா
பூக்களை அள்ளிக் கொள்ளவா
புன்னகை பூத்துக்கொள்ளவா
நான் மெல்லப் பித்தனாகிறேன்
அப்பப்போ முத்தம் இட்டு
வைக்கிறேன் முனகிறேன்
பூக்களோடு பேசிக்கொள்கிறேன்
ஏன் ஏன் ஏன்??? இது
பூக்களின்
புது
வசந்தம் அல்லவா?
சிவதர்சனி இராகவன்
10/4/2024

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading