பூக்களின் புது வசந்தம்

வசந்தத்தின் வைகறையின் எழிலை
வார்த்தைகளுள் அடக்கி விடல் தகுமோ
வர்ணத்தின் எழிலையெல்லாம் பரப்பி
எழுதி வைத்த பேரழகுன் விரிப்பே

கண்களுக்குள் வியப்பூட்டும் அழகு
கச்சிதமாய் விதைத்தெழுந்த செழிப்பு
பச்சை வயல் மீதிலெல்லாம் பரந்து
பருவத்தின் மொழியெழுதும் கவிதை

அறிவியலின் ஆற்றலுக்கும் சவாலாய்
இயற்கை மகள் நெய்தெழுதும் படைப்பு
தேன் கவரும் வண்டினங்கள் மொய்க்க
காந்தமென கவர்ந்தெழுதும் வசந்தம்

ஒரு நாளில் ஒரு பொழுதில் மடியும் ஆனாலும்
அதனுள்ளே மகரந்த சேர்க்கை
குதூகலத்தின் மொழியெழுதும் காதல்
மலர்தூதெழுதி உயிர் மூச்சை தொடுக்கும்

வசந்தத்தின் பெருஞ்செய்தி எடுத்து
வானமகள் பைப்பிடித்தே மலர்ந்து
பெருமகிழ்வை விழிகளுக்குள் தொடுக்கும்
மலரவழின் எழில் வதனம் பேரழகே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading