நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-264.

கவித்தலைப்பு!
” விழிப்பு”

எப் பாலர்க்கும் வேண்டும்
விழிப்பு – மீண்டும்
இழந்த நாட்டை
மீட்க வேண்டும்
என்னும் விருப்பு!
அதற்காகக் கட்டாயம்
புலம்பெயர்ந்த
நம் தாய்த் தமிழ்
உறவுகளுக்கு வேண்டும்
விழிப்பு!

கொத்தணிக் குண்டுமழையில் – சிங்கள இனவெறியில்
பன்னாட்டுச்
சூழ்ச்சி வலையில்
தமிழ் இன அழிப்பை
மே 18 ஐ நினைத்து
எரியட்டும் விழிப்பு
எனும் நெருப்பு
பகை முடிக்க
எப்பொழுதும்
நமக்கு வேண்டும்
விழிப்பு!

. அபிராமி கவிதாசன்.
07.05.2024

Nada Mohan
Author: Nada Mohan