28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மனோகரி ஜெகதீஸ்வரன்
குருதிப்புனல்
கந்தகக் குண்டு வீச்சால்
கழன்று போனது எம்மவர் மூச்சு
அந்தரத்தில் பறந்து சிதறிய அங்கங்கள்
சிந்திய குருதிப் புனலால்
சிவந்தது முள்ளி வாய்க்கால்
மரணித்த தாயின் மார்பினைச்
சப்பிய மழலை சுவைத்தது குருதிப்புனலை
மரணத்தில் தப்பியவரும்
அப்பினார் இதுகண்டு அனலை
அற்பருக்கு இதுவெல்லாம் அங்கதம்
அல்லல்பட்ட எம்மையோ எடுக்கவைத்தது சங்கற்பம்
எஞ்சியவர் சொன்ன கதைகள்
தஞ்சத்தில் பெற்ற வதைகள்
அஞ்சி வாழும் வாழ்க்கை
நெஞ்சில் கொட்டும் நெருப்பை
இனவாதம் தானே துப்பியது குருதிப்புனலை
கனவிலும் நினைத்தோமா இதனை
சனநாயகம் செத்தால்
சங்கடமே உச்சம்
சாட்சியெனவே நிற்கின்றோம் நாமும்
கண்ணீரோடு நித்தம்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...