Selvi Nithianandan

திருத்தம் பாவை அண்ணா
பதியும்போது கெங்காஸ்ராலியின் பெயரும் பதிவிடப்பட்டுள்ளது

Selvi: குருதிப்புனல்

காலம் கடந்து
போச்சு
ஞாலத்தில் நடந்தது என்னாச்சு
பாலமாய் பலநாடுகள்
கூட்டாட்சு
கூலமாய் குருதியில் நனைந்தாச்சு

நடந்தவை மறக்காத
நினைவாச்சு
கடந்தவை இழந்தவை
மீள்வரவாச்சு
இறந்தவை பலஇலட்சம்
பேராச்சு
இருப்பவை வழியற்ற
நிலையாச்சு

எத்தனை வலிகள்
எமக்காச்சு
எண்ணிடா பழிகளும்
வந்தாச்சு
என்று மே நினைவுகள்
கண்ணீராச்சு
ஏமாற்றமே ஆட்சியின்
தொடராகுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading