Selvi Nithianandan

திருத்தம் பாவை அண்ணா
பதியும்போது கெங்காஸ்ராலியின் பெயரும் பதிவிடப்பட்டுள்ளது

Selvi: குருதிப்புனல்

காலம் கடந்து
போச்சு
ஞாலத்தில் நடந்தது என்னாச்சு
பாலமாய் பலநாடுகள்
கூட்டாட்சு
கூலமாய் குருதியில் நனைந்தாச்சு

நடந்தவை மறக்காத
நினைவாச்சு
கடந்தவை இழந்தவை
மீள்வரவாச்சு
இறந்தவை பலஇலட்சம்
பேராச்சு
இருப்பவை வழியற்ற
நிலையாச்சு

எத்தனை வலிகள்
எமக்காச்சு
எண்ணிடா பழிகளும்
வந்தாச்சு
என்று மே நினைவுகள்
கண்ணீராச்சு
ஏமாற்றமே ஆட்சியின்
தொடராகுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading