கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு —

Jeya Nadesan

கவிதை நேரம்-16.05.2024
கவி இலக்கம்-1874
வைகாசி பதினெட்டு
——————–
2009 வைகாசி பதினெட்டாம் நாள்
அழியாத அழிக்க முடியாத நாள்
வையகமே இருட்டடித்து இருளாகி
இதயத்தை கசக்கி பிழிந்த
இருண்ட ஓர் கொடிய நாள்
வருடங்கள் பல கடந்து சென்றாலும்
வருத்தது எம் மக்களின் பிரிவு நாள்
உறவுகளை பிரிந்து போனவர்கள் அல்ல
பிரித்து வைத்த மிக கொடியவள்
மணம் முடித்த தன் மனைவியிடம்
பிரியாமல் பிரிவோம் என மடிந்தவர்கள்
மனைவி பிள்ளைகளை அனாதையாக்கி
தத்தளிக்க வைத்த கொடூரம் நிறைந்த நாள்
சுதந்திரக் காற்றை சுகமாக சுவாசித்தவர்கள்
நச்சுக் காற்றை முகர்ந்து மடிந்தவர்கள்
விடை பெற்று சென்ற நியதியில் உள்ளாகி
விதி வரைந்த நாள் வைகாசி பதினெட்டு

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading