10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு —
Jeya Nadesan
கவிதை நேரம்-16.05.2024
கவி இலக்கம்-1874
வைகாசி பதினெட்டு
——————–
2009 வைகாசி பதினெட்டாம் நாள்
அழியாத அழிக்க முடியாத நாள்
வையகமே இருட்டடித்து இருளாகி
இதயத்தை கசக்கி பிழிந்த
இருண்ட ஓர் கொடிய நாள்
வருடங்கள் பல கடந்து சென்றாலும்
வருத்தது எம் மக்களின் பிரிவு நாள்
உறவுகளை பிரிந்து போனவர்கள் அல்ல
பிரித்து வைத்த மிக கொடியவள்
மணம் முடித்த தன் மனைவியிடம்
பிரியாமல் பிரிவோம் என மடிந்தவர்கள்
மனைவி பிள்ளைகளை அனாதையாக்கி
தத்தளிக்க வைத்த கொடூரம் நிறைந்த நாள்
சுதந்திரக் காற்றை சுகமாக சுவாசித்தவர்கள்
நச்சுக் காற்றை முகர்ந்து மடிந்தவர்கள்
விடை பெற்று சென்ற நியதியில் உள்ளாகி
விதி வரைந்த நாள் வைகாசி பதினெட்டு

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...