அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

தீதும் நன்றும்

சர்வேஸ்வரி சிவருபன்

தீதும் நன்றும்

ஆயிரம் பொய்பேசினாலும் நன்மை செய்துவிடு
ஆபத்து இல்லாத வழிமுறையில் நின்றுவிடு
தீமையைக் கண்டதும் பயந்தும் போகாதே
தீமையை சாய்க்கும் செயலில் இறங்கிவிடு

வளத்தைப் பெருக்கவும் தீதும் வந்து கெளவும்
தீரமாக முயற்சியினால்
முன்னேறிக் கொள்வாய்
ஒன்றையிழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும்
தீதுமே நன்றாக அமையும் ஓர்நாள்

வாழும் போதினிலே எத்தனை மாற்றம்
மாற்றியும் அமைக்க எத்தனை திட்டம்
மறுக்க நினைத்தாலும் வெற்றிகொள்ள முடியாத நிற்பந்தம்
அகமும் புறமும் ஒன்றா கூறு

ஐயம் கொண்டால் அமைதி போகும்
இன்னல் வந்தால் மகிழ்வு போகும்
எதையும் தாங்கியும் நிற்கும் போதிலே
எல்லாம் நன்மை என்றே கொள்வோம்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan