கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

தீதும் நன்றும்

சர்வேஸ்வரி சிவருபன்

தீதும் நன்றும்

ஆயிரம் பொய்பேசினாலும் நன்மை செய்துவிடு
ஆபத்து இல்லாத வழிமுறையில் நின்றுவிடு
தீமையைக் கண்டதும் பயந்தும் போகாதே
தீமையை சாய்க்கும் செயலில் இறங்கிவிடு

வளத்தைப் பெருக்கவும் தீதும் வந்து கெளவும்
தீரமாக முயற்சியினால்
முன்னேறிக் கொள்வாய்
ஒன்றையிழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும்
தீதுமே நன்றாக அமையும் ஓர்நாள்

வாழும் போதினிலே எத்தனை மாற்றம்
மாற்றியும் அமைக்க எத்தனை திட்டம்
மறுக்க நினைத்தாலும் வெற்றிகொள்ள முடியாத நிற்பந்தம்
அகமும் புறமும் ஒன்றா கூறு

ஐயம் கொண்டால் அமைதி போகும்
இன்னல் வந்தால் மகிழ்வு போகும்
எதையும் தாங்கியும் நிற்கும் போதிலே
எல்லாம் நன்மை என்றே கொள்வோம்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading