Selvi Nithianandan

வேள்வி
பாரினில் வேள்வி
பலமாய் என்று
பலியாக்கி உண்ணும்
பலரும். உண்டு
பாவம் புண்ணியம்
எங்கும் முண்டு
படைத்தவன் படைப்பும்
உயர்வு வென்று

விடுதலை வேள்வியில்
நினைவின் இழப்பு
வீரர்கள் ஆத்மார்த்த
வேங்கையாய் இறப்பு
வீரமே மண்ணின்
மேலான சிறப்பு
வியூகமும்வேங்கையாய்
விதையான பொறுப்பு

உலகிலே யாகமாய்
பேரிழப்பு
உயிரையே மதிப்பதே
கணிப்பு
உதிரமும் வெள்ளமாய்
கிடப்பு
உய்து உணர்தலே
உளமது சிறப்பே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading