மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 269
11/06/2024 செவ்வாய்
“பாமுகமே வாழீ!”
————————-
இலண்டனில் பிறந்தவளே!
இன் தமிழை வளர்ப்பவளே!
அண்டமெலாம் செல்பவளே!
அம்பலத்தார் புத்திரியே!

இலக்கியம் தருபவளே!
இலட்சிய நாயகியே।!
கலக்கமும் தீர்ப்பவளே!
கவிதையின் ஊற்றிடமே!

சொல்வன்மை தருபவளே!
சோதியாய் ஒளிர்பவளே!
பல்வேறு மொழிகளையும்
பயிற்றுவிக்கும் பாமுகமே!

தயக்கங்கள் தீர்ப்பவளே!
தற் துணிவு தருபவளே!
மயக்கம் களைபவளே!
மாதவமாய் சிறப்பவளே!

கலைகளின் தலைமகளே!
கலைமகளின் கைமகளே!
விலையில்லா இருபத்தேழு
வயதினைக் காண்பவளே!

நிலவும் கடலும் போல்..
நீடூழி நீயும் வாழியென..
பாவாலே வாழ்த்துகிறேன்!
பல்லாண்டு வாழி பாமுகமே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading