” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 269
11/06/2024 செவ்வாய்
“பாமுகமே வாழீ!”
————————-
இலண்டனில் பிறந்தவளே!
இன் தமிழை வளர்ப்பவளே!
அண்டமெலாம் செல்பவளே!
அம்பலத்தார் புத்திரியே!

இலக்கியம் தருபவளே!
இலட்சிய நாயகியே।!
கலக்கமும் தீர்ப்பவளே!
கவிதையின் ஊற்றிடமே!

சொல்வன்மை தருபவளே!
சோதியாய் ஒளிர்பவளே!
பல்வேறு மொழிகளையும்
பயிற்றுவிக்கும் பாமுகமே!

தயக்கங்கள் தீர்ப்பவளே!
தற் துணிவு தருபவளே!
மயக்கம் களைபவளே!
மாதவமாய் சிறப்பவளே!

கலைகளின் தலைமகளே!
கலைமகளின் கைமகளே!
விலையில்லா இருபத்தேழு
வயதினைக் காண்பவளே!

நிலவும் கடலும் போல்..
நீடூழி நீயும் வாழியென..
பாவாலே வாழ்த்துகிறேன்!
பல்லாண்டு வாழி பாமுகமே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan