மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 269
11/06/2024 செவ்வாய்
“பாமுகமே வாழீ!”
————————-
இலண்டனில் பிறந்தவளே!
இன் தமிழை வளர்ப்பவளே!
அண்டமெலாம் செல்பவளே!
அம்பலத்தார் புத்திரியே!

இலக்கியம் தருபவளே!
இலட்சிய நாயகியே।!
கலக்கமும் தீர்ப்பவளே!
கவிதையின் ஊற்றிடமே!

சொல்வன்மை தருபவளே!
சோதியாய் ஒளிர்பவளே!
பல்வேறு மொழிகளையும்
பயிற்றுவிக்கும் பாமுகமே!

தயக்கங்கள் தீர்ப்பவளே!
தற் துணிவு தருபவளே!
மயக்கம் களைபவளே!
மாதவமாய் சிறப்பவளே!

கலைகளின் தலைமகளே!
கலைமகளின் கைமகளே!
விலையில்லா இருபத்தேழு
வயதினைக் காண்பவளே!

நிலவும் கடலும் போல்..
நீடூழி நீயும் வாழியென..
பாவாலே வாழ்த்துகிறேன்!
பல்லாண்டு வாழி பாமுகமே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading