பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்

நகுலா சிவநாதன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

தடமது படைத்தெழும் தனித்துவம்
தடையது உடைத்தெழும் மகத்துவம்
படையெனப் பலவும் நிகழ்வுதனை
பாமுக பரப்பினில் நிகழ்திடும் கணம்

எழுத்தென ஆரம்பம் கண்டு
எழுதிடும் சிறுவர் ஆக்கம் உண்டு
படைத்திடும் பல்வேறு ஆக்கப் பதிவு
பலப்படும் பாமுக திறன் தொிவு
விவாத அரங்கு குடும்பக்குவலயமென
பவனிவர வைத்த காட்சியொளி

இலண்டன் தமிழ் வானொலியாகி
இங்கித தமிழின் விாிவாகி
தனிமனித தொகுப்பாகி
பொியோர் சிறுவர் படைப்பாற்றல் கண்டு
27 அககைவையிலே இனிதாய் புதுமை
மகிழ்வு காணும் பொழுதிலே
புளகாங்கிதம் அடைகிறதே!!
விருட்ச வீாியமாய் விளங்கட்டும்
பாமுக பரப்பாய் மிளிரட்டும் என்றும்

நகுலா சிவநாதன் 1765

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading