” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்

நகுலா சிவநாதன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

தடமது படைத்தெழும் தனித்துவம்
தடையது உடைத்தெழும் மகத்துவம்
படையெனப் பலவும் நிகழ்வுதனை
பாமுக பரப்பினில் நிகழ்திடும் கணம்

எழுத்தென ஆரம்பம் கண்டு
எழுதிடும் சிறுவர் ஆக்கம் உண்டு
படைத்திடும் பல்வேறு ஆக்கப் பதிவு
பலப்படும் பாமுக திறன் தொிவு
விவாத அரங்கு குடும்பக்குவலயமென
பவனிவர வைத்த காட்சியொளி

இலண்டன் தமிழ் வானொலியாகி
இங்கித தமிழின் விாிவாகி
தனிமனித தொகுப்பாகி
பொியோர் சிறுவர் படைப்பாற்றல் கண்டு
27 அககைவையிலே இனிதாய் புதுமை
மகிழ்வு காணும் பொழுதிலே
புளகாங்கிதம் அடைகிறதே!!
விருட்ச வீாியமாய் விளங்கட்டும்
பாமுக பரப்பாய் மிளிரட்டும் என்றும்

நகுலா சிவநாதன் 1765

Nada Mohan
Author: Nada Mohan